Friday 3rd of May 2024 04:42:33 PM GMT

LANGUAGE - TAMIL
.
மத்திய மாகாணம் உள்ளிட்ட சில பிரதேசங்களில் மழை; ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும்!

மத்திய மாகாணம் உள்ளிட்ட சில பிரதேசங்களில் மழை; ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும்!


மத்திய மாகாணம் உள்ளிட்ட சில பிரதேசங்களில் இன்று மழை பெய்யும் அதேவேளை ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய இடங்களில் சீரான வானிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று என்பதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE